search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரும பிரச்சனை"

    • முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு தான் சருமத்தில் கருந்திட்டு பிரச்சினை ஏற்படும்.
    • இப்போது 20 வயதிலேயே பலர் பாதிக்கப்படுகிறார்கள்.

    பெண்களின் அழகை பாதிக்கும் சரும பிரச்சினைகளில் ஒன்று பிக்மென்டேஷன். இதை 'கருந்திட்டு' அல்லது 'மங்கு' என்றும் கூறுவார்கள். இது கன்னம், நெற்றி, மூக்கின் மேல் பகுதி, கழுத்தின் பின் பகுதியில் காணப்படும் ஒரு வகையான கருப்பு நிற படையாகும். தோலின் நிறத்தைப் பொறுத்து இதன் அடர்த்தி வேறுபடும். பிக்மென்டேஷன் எதனால் ஏற்படுகிறது? அதற்கான தீர்வு என்ன? என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

    பிக்மென்டேஷன் ஏற்பட காரணம் என்ன?

    முன்பெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு தான் சருமத்தில் கருந்திட்டு பிரச்சினை ஏற்படும். ஆனால் இப்போது 20 வயதிலேயே பலர் பாதிக்கப்படுகிறார்கள். கழிவுகள் மற்றும் நச்சுப்பொருட்கள் உடலில் இருந்து சரியாக வெளியேறாமல் இருப்பது, ஊட்டச்சத்து பற்றாக்குறை, சருமத்தில் படியும் இறந்த செல்களை அவ்வப்போது நீக்காமல் இருப்பது, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு போன்ற பல காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை ஏற்படுகிறது.

    ஹார்மோன் சமநிலையில் மாற்றம் ஏற்படுவதாலும் முகத்தில் ஆங்காங்கே கருந்திட்டு மற்றும் சிவப்பு நிற புள்ளி வருகிறது.

    குழந்தைப்பேறுக்கும், பிக்மென்டேஷனுக்கும் சம்பந்தம் உண்டா?

    குழந்தைப்பேறின்போது அதிக ரத்த இழப்பு உண்டாகும். பால் ஊட்டும்போது உடலில் சத்து குறைபாடு ஏற்படும். இதனால்தான், கர்ப்ப காலத்திலும், குழந்தை பெற்ற பிறகும், தாய் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சமச்சீரான உணவுகளை சாப்பிடவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தை பிறந்த பிறகு, தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம், சத்துக்குறைபாடு போன்ற காரணங்களால் பிக்மென்டேஷன் பிரச்சினை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தை சீராக பராமரித்தால், இந்தப் பிரச்சினை ஏற்படாது. காலநிலை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்தாலும் பிக்மென்டேஷன் பிரச்சினை வரலாம். இதற்கு வெளிப்பூச்சு கிரீம்கள் தீர்வு தராது.

    எத்தகைய உணவுகள் பிக்மென்டேஷனை தடுக்கும்?

    கடல் உணவுகளான மீன், இறால், நண்டு, மீன் எண்ணெய் போன்றவையும், பாதாம், பூசணி விதை, ஆளி விதை, நெல்லிக்காய், வில்வ இலை, திரிபலா சூரணம், கருஞ்சீரகம், சோற்றுக் கற்றாழை ஆகியவையும் பிக்மென்டேஷனைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

    பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு தீர்வு என்ன?

    சமச்சீரான உணவு, நேரம் தவறாத தூக்கம், போதுமான தண்ணீர், உடற்பயிற்சி, அமைதியான மனநிலை போன்றவை பிக்மென்டேஷன் பிரச்சினைக்கு தீர்வாகும். மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த மருந்துகளை சாப்பிட்டு உடலில் தங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்றுதல், தோலில் ஏற்பட்டுள்ள பாதிப்பை பொறுத்து சிகிச்சை பெறுதல் போன்றவையும் பிக்மென்டேஷன் பிரச்சினையை குணமாக்கும். குப்பைமேனி இலை, வேப்ப இலை, அருகம்புல் ஆகியவற்றை சம அளவு எடுத்து பசை போல அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் பிக்மென்டேஷன் குணமாகும்.

    • துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும்.
    • வயதாவதை தள்ளிபோடும் குணம் துளசியில் உள்ளது.

    துளசியில் அதிக நன்மைகள் உண்டு என்று அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் நமது சருமத்தை பொலிவாக்கவும் இது உதவுகிறது.

    துளசி சருமத்திற்கு மிகவும் நல்லது. இந்நிலையில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே, மான்கனீஸ், காப்பர், கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், ஓமேக் 3 பேட்டி ஆசிட் இதில் இருக்கிறது.

    வயதாவதை தள்ளிபோடும் குணம் துளசியில் உள்ளது. இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட் உள்ளதால், வயதாவதை தள்ளிப்போடும்.மேலும் நமது சருமத்தை பாதிக்காமல் பார்த்துக்கொள்கிறது. தோல் சிவப்பாவதும், எரிச்சலும், தோல் சுருக்கத்தையும் குறைக்க துளசி உதவும்.

    பங்கஸ் ( fungs) தொற்று மற்றும் பாக்ட்ரீயா ஆகியவற்றிற்கு எதிரான பண்புகளை துளசி வழங்குகிறது. முகப்பருக்களுக்கு காரணமான கிருமிகளை, இது பரவாமல் தடுக்கும். நமது முகத்தில் உள்ள துளைகள் அடைபடும்போது முகப்பரு ஏற்படும் . இந்நிலையில் இதை தடுப்பதால், முகப்பரு ஏற்படாது.

    இந்நிலையில் துளசி, வேப்ப மரத்தின் இலைகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து, அத்துடன் தேன் கலந்து நமது முகத்திற்கு பயன்படுத்தினால், இது முகப்பரு வராமல் தடுக்கும்.

    வெயிலில் வெளியே சென்றால் சருமம் கருத்துவிடும். இந்நிலையில் துளசியில் வைட்டமின் சி இருக்கிறது. இந்த வைட்டமின் சி, சருமம் இழந்த நிறத்தை மீண்டும் பெற உதவும். இதுபோல கரும் புள்ளிகளை சரியாக்க துளசியை பயன்படுத்தலாம்.

    துளசி பொடி, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்து சருமத்தில் பயன்படுத்தினால், சருமம் மிருதுவாக மாறும்.

    நீரின்றி வறண்டுபோன சருமத்தை, மிருதுவாகவும், பொலிவாகவும் மாற்றும். துளசியில் இயற்கையான எண்ணெய் இருப்பதால், நமது சருமத்தின் தண்ணீர் பதத்தை இழக்காமல் பாதுகாக்கும்.

    இந்நிலையில் சுற்றுப்புற சூழலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும். துளசி இலைகளை நன்றாக கழுவி, தயிர் அல்லது யோகர்டில் சேர்த்து பயன்படுத்தலாம். இது சருமத்தை சுத்திகரிக்கும்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.
    • சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

    தக்காளிச்சாறு முக அழகிற்கு ஏராளமான நன்மைகளைத் தருகின்றது. தக்காளிச்சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.மேலும் முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.இதனால் முக அழகு தெளிவடைகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது. தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது.

    முகப்பரு பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தக்காளியை பயன்படுத்தினால் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு தக்காளியிலுள்ள விட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். சருமத்துளைகள் சுருங்கும் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும்.

    தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

    தேனில் தக்காளித் துண்டை நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். பருக்களால் ஏற்படும் தோல் சிவந்து போவதையும் இது குறைக்கிறது.

    கிளிசரின் உடன் தக்காளி சாற்றை கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.

    அதிக நேரம் வெயிலில் சுற்றி முகம் கருமையடைந்து இருப்பின், தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டுகளால் முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கருமை விரைவில் அகன்றுவிடும்.

    முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் முகம் பொலிவுடன் காணப்படும்.

    முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், அதனைத் தவிர்க்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள எண்ணெய்பசை அகன்றுவிடும்.

    தினமும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

    தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட நினைத்தால், தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை (Face pack) வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் அழகு ஜொலிக்கும்.

    • சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை இயற்கையாக குணமாக்கும் தன்மை தேனில் உள்ளது.
    • தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது.

    தவறான உணவு பழக்கம்,அதிக காற்று மாசு, இரவு நேரத்தில் தாமதமாக உறங்குதல், அதிக கெமிக்கல் கொண்ட கிரீம்களை பயன்படுத்துதல் இப்படிபட்ட வாழ்க்கை முறை மாற்றத்தால் முகத்தின் ஆரோக்கியம் கெட்டு பல வித பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனால் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கரு வளையங்கள், தழும்புகள் ஆகியவை உண்டாகுகின்றன. இது போன்ற பாதிப்புகள் அனைத்தையும் எளிதில் குணமாக்க ஆயுர்வேத மருத்துவ குணம்கொண்ட தேன் உதவுகிறது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

    சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளை இயற்கையாக குணமாக்கும் தன்மை தேனில் உள்ளது. இதில் உள்ள என்சைம்கள், தாவரங்களின் மூலப்பொருட்கள் மற்றும் இதிலுள்ள நல்ல பாக்டீரியா ஆகியவை ஒன்று சேர்ந்து உங்களுக்கு சிறந்த முக அழகை தரும். தூய்மையான, பதப்படுத்தப்படாத தேன் உங்கள் முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகளை நீக்கி பளபளப்பான சரும அழகை உண்டாக்கும். மேலும் இதன் இயற்கை தன்மை தோல் நோய்கள் மற்றும் அரிப்புகள் வராமல் தடுத்து உங்களை எப்போதும் இளமையாக வைக்கும்.

    தேனில் இயற்கையாகவே ஈரப்பதம் அளிக்கும் மூலப்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே முகத்திற்கு தேனை பயன்படுத்தினால் மிக விரைவிலே மங்கலான உங்கள் முக அழகு பொலிவாக மாறிவிடும். சிறிது எலுமிச்சை சாற்றுடன் தேனை கலந்து முகத்தில் தடவி வருவதால் கரும்புள்ளிகளை எளிதில் விரட்டலாம். அத்துடன் உங்கள் சருமத்தின் நிறத்தை கூட்டும், முகத்தை மென்மையாக்கும், முகத்தின் நிறத்தை பளபளப்பாக்கும், என்றென்றும் இளமையான தோற்றத்தை தரும். தேனில் உள்ள ஹைட்ரஜன் பெராக்ஸைட் முகத்தில் உள்ள தழும்புகளை மறைய வைக்க உதவும் என அழகியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

    இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் அதிகமான பருக்களால் அவதிப்பட்டு வருகின்றனர். பருக்கள் உருவாகி மறைந்து விடாமல், அந்த இடத்தில் பெரிய தழும்புகளையும் உருவாக்கி விடுகிறது. பருக்களையும் அதனால் ஏற்படும் தழும்புகளையும் மிக சுலபமாக நீக்க சிறிது நெய்யுடன் தேன் கலந்து தடவி வாருங்கள். இப்படி செய்வதால் முகத்தில் உள்ள புண்கள், வீக்கம், வடுக்கள் போன்றவை எளிதில் குணமாகும்.

    கடைகளில் விற்கும் பதப்படுத்தட்ட தேனை முகத்திற்கு பயன்படுத்த கூடாது. காரணம், கடைகளில் விற்கப்படும் தேனை முழுவதுமாக சூடு படுத்துகின்றனர். எனவே அதில் உள்ள இயற்கை பாக்டீரியா, என்சைம்கள் குறைந்து விடுகிறது. எனவே சரும பாதுகாப்பிற்கு சுத்தமான, பதப்படுத்தபடாத தேனை பயன்படுத்த வேண்டும்.

    • பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு கழுத்தை சுற்றி கருமை நிறம் படர்ந்து இருப்பதை காணலாம்.
    • இந்த பிரச்சினையை மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே போக்கி விடலாம்.

    பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு கழுத்தை சுற்றி கருமை நிறம் படர்ந்து காணப்படுவதை கண்கூடாகப் பார்க்க முடியும். நகைகள் அணிவது, உடல் சூடு, அலர்ஜி இவையே இதற்கான அடிப்படைக் காரணங்கள். இந்த பிரச்சினையை மிக எளிமையாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே போக்கி விடலாம்.

    உருளைக்கிழங்கை தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக அரிந்து அரைத்து, சாறு எடுத்து, கழுத்தை சுற்றி தேய்த்து வர நாளடைவில் கருமை மறைந்து தோலின் உண்மையான நிறம் தெரியத் தொடங்கும்.

    இதேபோல் பாதி எலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மையினால், கழுத்தில் உள்ள கருமை அகலும்.

    வெள்ளரிக்காய் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும். எனவே வெள்ளரிக்காய் சாறு மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து, கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவ வேண்டும்.

    பப்பாளிபழத்தின் தோல், எலுமிச்சை பழத்தோல், ஆரஞ்சு பழத்தோல் - இதில் ஏதாவது ஒன்றை நன்றாக அழுத்தி கழுத்தில் தேய்த்து வந்தால் படிப்படியாக கருமை நிறம் மறையும்.

    முட்டைக்கோஸை அரைத்து அந்த சாறையும் கருப்பாக நிறம் மாறிய கழுத்தில் தேய்க்கலாம்.

    இதனுடன் சிறிது தேன் அல்லது எலுமிச்சை சாறு கலந்து தேய்ப்பது கழுத்து கருமையை போக்குவதோடு மினுமினுப்பையும் தரும்.

    கோதுமை மாவு, ஓட்ஸ் பவுடர், பாசிப்பயறு மாவு - இந்த மூன்றையும் சமமாக எடுத்து பாலுடன் திக்காக குழைத்துக் கொள்ளவும். அதை கழுத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்து 20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பிறகு கழுவிக் கொள்ளவும்.

    கழுத்து கருமையை போக்க சிறிது பால், தேன், எலுமிச்சை சாறு கலந்து கழுத்தில் தடவி 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து நிறம் படிப்படியாக மாறுவதை காணலாம்.

    • லேசர் சிகிச்சை என்பது என்னவென்று பலருக்கு தெரியவில்லை.
    • நமது வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

    நமது தினசரி உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை முறை, நவீன தொழில்நுட்பங்கள் முதலியவை பலவிதமான தீமைகளை விளைவிக்கின்றது. இன்று பெரும்பாலான பெண்களின் முகம் மற்றும் சருமத்தில் அதிக முடிவளர்ச்சியோடு காணப்படுவதால், சமுதாயத்தில் தன்னம்பிக்கையை அவர்கள் இழந்து தங்களது சுயதிறமைகளை வெளியுலகத்திற்கு வெளிப்படுத்த இயலாமல் பின்னிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    இத்தகைய முடிவளர்ச்சி ஹார்மோன் ஏற்றத்தாழ்வினால் தேவையற்ற முடிவளர்ச்சி பெண்களுக்கு ஏற்படுகிறது. இதனை தடுக்கலாமா?, குறைக்கலாமா? என்று சந்தேகமும், அச்சமும் பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆம்! நிச்சயமாக இதிலிருந்து ஒரு விடுதலை பெறமுடியும். டயோட் லேசர் சிகிச்சை எனப்படும் நவீன தொழில்நுட்பம் வாயிலாக தேவையற்ற முடியை அகற்ற முடியும்.

    லேசர் சிகிச்சை என்பது என்னவென்று பலருக்கு தெரியவில்லை. இந்த லேசர் கதிர் என்பது சருமத்தில் உள்ள மெலானின் எனப்படும் குறிப்பிட்ட க்ரோமாபோரிளை தாக்கி அதனை செயலிழக்க செய்கிறது. இதனால் முடிவளர்ச்சி மற்றும் புதிய முடி வளர்வதில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் சாதாரண திசுக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    இதனை எத்தனை அமர்வுகளில் சரி செய்யலாம் என பலருக்கு சந்தேகங்கள் இருக்கலாம். அது ஒவ்வொருவருக்கும் முடியின் தடிமனை பொருத்து வேறுபடலாம். சிலருக்கு 6 அமர்வுகளும், சிலருக்கு அதற்கு மேலும் மாறுபடலாம். சிகிச்சையின் நிறைவில் கண்ணுக்கு தெரியாத அளவிற்கு நம் முடி வளர்ச்சியை கட்டுப்படுத்த நிச்சயமாக இயலும்.

    அதே சமயம் நமது ஹார்மோன் குறைபாடுகளை மருத்துவ நிபுணர்களை அணுகி சிகிச்சை பெற்று சீராக கொண்டு செல்வது மிக இன்றியமையாதது. நமது வாழ்க்கை முறையை நாம் மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவே உடல் நலத்திற்கு சிறந்தது என ஜெருஷ் மருத்துவமனை டாக்டர் பிளாட்பின் தெரிவித்தார்.

    டாக்டர் பிளாட்பின், பெனிலா பிளாட்பின்

    • குளிர்காலத்தில் இந்த அரிப்பு உடலில் பல பகுதிகளில் பரவுகிறது.
    • தோளில் தடுப்புகள் மற்றும் முகப்பரு போன்ற சிறிய சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும்.

    சருமத்தில் உள்ளநீர் மற்றும் இயற்கை எண்ணெய்களின் ஈரப்பதம் குறையும் போது அரிப்பு ஏற்படுகிறது. குளிர்ந்த வறண்ட காற்று மற்றும் வெப்பமாக்கல் போன்றவை சருமத்தின் ஈரப்பதம் குறைய முக்கிய காரணமாகும்.

    பிற சுற்றுச்சூழல் காரணிகள், வாழ்க்கை முறை காரணிகள் மற்றும் சில மருத்துவ நிலைமைகள் ஆகியவற்றாலும் வறண்ட சருமத்தை உண்டாக்கி சருமத்தில் தடிப்புகளை ஏற்படுத்தும்.

    தோல் அலர்ஜி:

    வறண்ட தோல் ஆனது உலர்ந்த அரிப்பு மற்றும் திட்டுகளை ஏற்படுத்தும். இது முறையற்ற செல் சுழற்சி (Inproper cell Turn over) அல்லது கடுமையான இரசாயனங்கள், ஒவ்வாமை அல்லது கிருமி தொற்று ஆகியவற்றால் ஏற்படலாம்.

    ரோசாசியா இது ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இது தோளில் தடுப்புகள் மற்றும் முகப்பரு போன்ற சிறிய சிவப்பு புடைப்புகளை ஏற்படுத்தும்.

    குளிர் அர்டிகேரியா

    Cold Urticaria

    குளிர்ச்சியின் வெளிப்பாட்டிற்கு பிறகு சருமத்தில் வீக்கம், அரிப்பு மற்றும் புடைப்புகள் உண்டாக்குகின்றது. சிலருக்கு குளிர்ந்த நீரில் நீந்திய பிறகு ஏற்படுகிறது. மேலும் சிலருக்கு குளிர்ந்த காற்றால் உண்டாகலாம். இதனால் ஏற்படும் அரிக்கும் உணர்வானது தற்காலிகமானது. ஒன்று முதல் இரண்டு மணி நேரம் நீட்டிக்கும்.

    சொரியாசிஸ்:

    இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுவதாகும். (Auto Immuno Disease) தடி மனான சிவப்பு செதில் போன்ற சரும திட்டுகளை ஏற்படுத்தும். மேலும் சருமத்தில் வெடிப்பு, எரிச்சல் மற்றும் மூட்டுகளில் விரைப்பு ஆகிய வற்றையும் ஏற்படுத்தும்.

    Dermatitis / Eczema:

    குளிர்காலத்தில் இந்த அரிப்பு உடலில் பல பகுதிகளில் பரவுகிறது. குளிர்ந்த வெப்பநிலைக்கு அதிகம் வெளிப்படும் கைகள் மற்றும் கால்களில் அதிகம் பாதிக்கலாம். இது சருமத்தில் சிவப்பு, அரிப்பு, கரடு முரடான செதில் திட்டுகள் அல்லது கொப்புளங்கள் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும்.

    Wind burn / Winter itch

    குளிர்ந்த காற்றால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சலை குறைக்கும் குளிர்காற்றில் வெளியில் செல்ல நேரும் போது கையுறை மற்றும் துணிகளால் கைகளை மற்றும் வெளிப்படும் தோலை மூடும் போது இந்த பாதிப்புகளை குறைக்கலாம்.

    உலர்ந்த/வெடித்த உதடுகள்:

    குளிர்ந்த காலத்தில் பெரும்பான்மையானோர் எதிர் கொள்ளும் ஒரு பிரச்சனை உலர்ந்த மற்றும் வெடித்து ரத்தம் வரும் உதடுகள் ஆகும். Lip balms with SPF கொண்ட களிம்புகளை உபயோகிக்கும் போது இதனை குறைக்கலாம்.

    குளிர்காலத்தில் தோல் சிகிச்சையில் சருமத்தை மீண்டும் ஈரமாக்குவதிலும் எரிச்சலை தணிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். சருமத்துக்கு மாய்ஸ்ரைஸர்கள், எண்ணைகள் மற்றும் கிரீம்களை பயன்படுத்தலாம்.

    அதே நேரம் ரோசாசியா, சொரியாசிஸ், எக்ஸிமா, தெர்மோடைடுஸ் போன்ற சரும பாதிப்பை கொண்டவர்கள் தோல் மருத்துவரை அணுகுவது நல்லது.

    Dr. TAMILARASISHANMUGANATHANMBBS., MD (Derm), Aesthetic medicine (AAAM-USA) Consultant Dermatologist.

    • சிலருக்கு நெற்றியில் மட்டும் தழும்புகளும், நிற மாற்றமும் காணப்படுவதுண்டு.
    • இதை ஃபோர்ஹெட் டேனிங் என்று கூறுவார்கள்.

    சிலருக்கு உடலின் சில பாகங்களில் மட்டும் அல்லது முகத்தில் சில இடங்களில் மட்டும் நிறம் மாறுவதுண்டு. இது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருப்பதோடு முகப்பொலிவையும் கெடுத்து விடுகிறது. மேலும், பல இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது இது நமது தன்னம்பிக்கையையும் கெடுத்து விடுகிறது. முகத்தில் இப்படி நிறம் மாறும் பாகங்களில் நெற்றியும் ஒன்றாகும்.

    பல சமயங்களில் நமது கன்னங்களும் முகத்தின் பிற பாகங்களும் பொலிவாக இருக்க, நெற்றியில் மட்டும் தழும்புகளும், நிற மாற்றமும் காணப்படுவதுண்டு. இதை ஃபோர்ஹெட் டேனிங் என்று கூறுவார்கள். டேனிங் காரணமாக, முகம் மற்றும் நெற்றியின் நிறம் வித்தியாசமாக தெரிகிறது. சில வீட்டு வைத்தியங்கள் மூலம் நெற்றியில் உள்ள டேனை எளிதாக சுத்தம் செய்யலாம்.

    மஞ்சள்

    மஞ்சள் அதிக மருத்துவ குணம் கொண்டது. மஞ்சள் பல சரும பிரச்சனைகளை நீக்க பயன்படுகிறது. இதனை பயன்படுத்தினால் நெற்றியில் உள்ள கருமை நீங்கும். பச்சை பாலில் மஞ்சளை கலந்து தோல் பதனிடும் இடத்தில் தடவி சிறிது நேரம் விட்டு பின் தண்ணீரில் கழுவவும். டேனிங் பிரச்சனை நீங்கும்.

    வெள்ளரிக்காய்

    வெள்ளரிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வெள்ளரிக்காயை உட்கொள்வதால் பல வித ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். இதுமட்டுமின்றி, வெள்ளரிக்காய் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதன் மூலம், ஸ்கின் டேனிங் மற்றும் கருவளையம் போன்ற பிரச்சனைகள் நீங்கும். வெள்ளரிக்காய் துண்டுகளை சருமத்தின் நிறம் மாறிய இடத்தில் மசாஜ் செய்யவும். முகத்தை 30 நிமிடம் அப்படியே விட்டு பின்னர் தண்ணீரில் கழுவினால் தோல் சுத்தமாகும்.

    • நேரத்திற்கு தூங்குவது கிடையாது.
    • நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது.

    சில பேருக்கு 25 வயதைக் கடந்த உடனேயே வயதான தோற்றம் வர தொடங்கிவிடும். முகத்தில் தோல் சுருக்கம் ஏற்பட தொடங்கும். கண்களுக்கு கீழே தோல் சுருங்கி இருக்கும். வாயை சுற்றி சுருக்கம் வரத் தொடங்கியிருக்கும். கழுத்தில் சுருக்கங்கள் அதிகமாக வரத் தொடங்கும்.

    முதலில் நம்முடைய தோல் சுருக்குவதற்கு காரணம், நம்முடைய வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் தான். நேரத்திற்கு தூங்குவது கிடையாது. நேரத்திற்கு சாப்பிடுவது கிடையாது. இயற்கையாகக் கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் பருகுவது கிடையாது. நல்ல உணவை சாப்பிடுவது கிடையாது. ஊட்டச்சத்து உடலுக்கு கிடைப்பதில் குறைபாடு. இவை எல்லாவற்றையும் தாண்டி இன்றைய சூழ்நிலையில் இருக்கக் கூடிய மன அழுத்தம். இவைகள் எல்லாம் ஒன்று சேரும் போது நமக்கு வயதான தோற்றம் இளமையிலேயே வந்துவிடுகிறது.

    வயதான தோற்றத்தைத் தள்ளிப் போட வேண்டும் என்றால் நம்முடைய உணவு பழக்க வழக்கத்தில் இயற்கையாக கிடைக்கும் பழங்கள் காய்கறிகள் பயிறு வகைகளை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். முகத்தில் இருக்கும் சுருக்கத்தை நீக்க வீட்டிலிருந்தபடியே பேஸ் மாஸ்க் தயாரிக்கலாம் வாங்க..

    மைசூர் பருப்பு 2 ஸ்பூன், பச்சரிசி 2 ஸ்பூன், இந்த இரண்டு பொருட்களையும் எடுத்து மிக்ஸியில் போட்டு நைஸாகப் பொடித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பொடியை தேவையான அளவு அதாவது 2 ஸ்பூன் சிறிய பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். இதோடு தயிர் – 1 ஸ்பூன், அரைத்த தக்காளி விழுது – 1 ஸ்பூன், கஸ்தூரி மஞ்சள் – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து விழுதாக கலந்து இதை உங்களுடைய முகத்தில் கீழ்ப் பக்கத்தில் இருந்து மேல்பக்கம் அப்ளை செய்து கொள்ள வேண்டும். கழுத்திலிருந்து பேஸ் மாஸ்க் போட வேண்டும்.

    பத்து நிமிடம் கழித்து உங்களுடைய தோல் இறுக்கி பிடிக்கத் தொடங்கும். அதன் பின்பு கையில் லேசாக தண்ணீரைத் தொட்டு உங்களுடைய முகத்தில் லேசாக மசாஜ் செய்து குளிர்ந்த தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி வந்தால், முகத்தில் நல்ல வித்தியாசம் தெரியும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதை செய்து வந்தாலே வயதான தோற்றம் தள்ளிப் போகும். முகத்தில் சுருக்கம் வந்தவர்கள் இதை பயன்படுத்தினால் படிப்படியாக முகச்சுருக்கம் குறையும். முகத்தில் சுருக்கம் இல்லாதவர்கள் இளமையாக இருக்கும்போதே இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் வரக்கூடிய சுருக்கம் தள்ளிப்போகும். முயற்சி செய்து பாருங்கள்.

    • வைட்டமின் ஈ எண்ணெயால் நமக்கு கிடைக்கும் பலன்கள் அதிகம்.
    • வைட்டமின் ஈ எண்ணெயை சருத்திற்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

    வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தி பல அழகுக் குறிப்புகளை செய்யலாம். அதனால் நமக்குக் கிடைக்கும் பலன்களும் அதிகம். அவை என்னென்ன பார்க்கலாம்.

    வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் மஞ்சள் சேர்த்து குழைத்து கரும்புள்ளிகள் இருக்கும் இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். இவ்வாறு செய்ய கரும்புள்ளிகள் மறையும்.

    காஃபி தூள், வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் சர்க்கரை மூன்றையும் கலந்து முகத்தில் வட்டப்பாதையில் ஸ்கிரப் செய்ய இறந்த செல்கள், அழுக்குகள் நீங்கி முகம் பளபளக்கும்.

    இரவு தூங்கும் முன் வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் ஒன்றை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு படுத்துவிடுங்கள். மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு செய்து வர சுருங்கிய தோல்கள் இறுகி இளமையான தோற்றம் கிடைக்கும்.

    கண்களை சுற்றி கருவலையங்கள் இருந்தால் இரவு தூங்கும் முன் கண்களை சுற்றி மசாஜ் செய்துவிட்டு அப்படியே தூங்கிவிடுங்கள். தொடர்ந்து 3 நாட்கள் செய்ய கருவளைம் நீங்கும்.

    இரவு தூங்கும் முன் வைட்டமின் ஈ எண்ணெயை புருவத்தில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின் அப்படியே தூங்கிவிட்டு மறுநாள் காலை கழுவுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய அடர்த்தியான புருவங்களைப் பெறலாம்.

    கை கால்கள் வறட்சியாக இருந்தால் குளித்துவிட்டு வைட்டமின் ஈ எண்ணெயை மாய்ஸ்சரைசர் போல் தடவுங்கள். தோல் மென்மையாக இருக்கும். எண்ணெய் பிசுக்கு இருக்காது.

    தலைக்கு தேங்காய் எண்ணெய் தடவும்போது அதனுடன் வைட்டமின் ஈ எண்ணெயை கலந்து தடவ எந்த தலைமுடிப் பிரச்சனையும் எட்டிப்பார்க்காது.

    • கொத்தமல்லியில் வைட்டமின் ஈ அதிக அளவில் உள்ளது.
    • கொத்தமல்லியை எந்தெந்த சருமப் பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    கருப்பாக இருந்தாலும் சிவப்பாக இருந்தாலும் முகம் பளிச்சென்று பளிங்கு போல இருக்க வேண்டுமென்று தான் அதிகம் விரும்புவார்கள். அதற்கு வீட்டில் சமைக்க வைத்திருக்கும் ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை போதும்.

    கொத்தமல்லி இலையில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதன் தண்டு, இலை, விதை ஆகியவற்றில் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்திருக்கும் கொத்தமல்லியில் வைட்டமின் ஈ யும் அதிக அளவில் நிறைந்திருக்கிறது. இது சருமப் பராமரிப்புக்கு மிகவும் மிகுந்தது.

    மாசுக்கள் மற்றும் தூசுகளால் சருமப் பிரச்சினைகள் அதிகம் உண்டாகின்றன.சூரிய ஒளியின் அதிகப்படியான வெப்பத்தால், புறஊதாக் கதிர்களின் தாக்கத்தால் சருமம் பாதிப்படைகிறது.சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் உண்டாகும்.

    இந்த பிரச்சினைகளைச் சரிசெய்ய கொத்தமல்லி இலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொத்தமல்லி இலையை எந்தெந்த சருமப் பிரச்சினைகளுக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    மூக்கு, வாய்க்குக் கீழ்ப்பகுதி மற்றும் நெற்றியில் அதிக அளவில் கரும்புள்ளிகள் இருக்கும். அவற்றைக் குறைக்க கொத்தமல்லி பெரிதும் உதவும்.

    2 ஸ்பூன் கொத்தமல்லி சாறெடுத்து அதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறைக் கலந்து முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து, 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வாரத்தில் இதை இரண்டு முறை செய்து வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் குறையும்.

    சருமத்தில் கருந்திட்டுக்கள், முகம் முழுக்க ஒரே நிறமாக இல்லாமல் அன் ஈவன் டோனுடன் இருப்பவர்கள் சருமத்தின் நிறத்தைக் கூட்டவும் கருந்திட்டுக்களைக் களையவும் கொத்தமல்லி இலை சருமத்தில் சிறப்பாகச் செயலாற்றும்.

    கொத்தமல்லி இலையின் சாறுடன் சிறிது கற்றாழை ஜெல்லும் அதனுடன் தயிரும் சேர்த்து நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து நன்கு வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள். பின்பும் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் நல்ல கலராகும். குறிப்பாக, எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த பலனைக் கொடுக்கும்.

    ஒரு மிக்ஸி ஜாரில் சுத்தம் செய்த 1 கப் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு அரைத்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள்.

    அடுத்து அதில் (1 ஸ்பூன்) எலுமிச்சை சாறும், (1 ஸ்பூன்)கற்றாழை ஜெல், (1 ஸ்பூன்)ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் அப்ளை செய்து, 20 நிமிடங்கள் வரை உலர விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவுங்கள். முதல் முறை பயன்படுத்தியதுமே நல்ல வித்தியாசத்தை உங்களால் உணர முடியும்.

    • கண்ணுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது அவசியம்.
    • வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம்.

    திருமணத்துக்கு தயாராகும் மணப்பெண்கள் அனைவரும் சந்தோஷம், பரபரப்பு, எதிர்பார்ப்பு, குழப்பம் என பல்வேறு உணர்வுகள் கலந்த மனநிலையில் இருப்பார்கள். மேலும் திருமணத்துக்கு தேவையான பொருட்கள் வாங்குவதில் ஏற்படும் அலைச்சல் மற்றும் பணிச்சுமை ஆகியவையும் சிரமத்தை தரும். இந்த பாதிப்புகள் அவர்களின் சருமத்தில் பிரதிபலிக்கக்கூடும். எனவே, 3 மாதத்திற்கு முன்பாகவே, சருமப் பராமரிப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்.

    இதோ சில சரும பராமரிப்பு முறைகள்:

    * சருமப் பராமரிப்பில் முதலில் செய்ய வேண்டியது, நிறைய தண்ணீர் குடித்தல் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல் ஆகும். இதன் மூலம் உடலில் தேங்கி இருக்கும் நச்சுத்தன்மை மற்றும் கழிவுகள் வெளியேறி சருமம் பொலிவு பெறும்.

    * தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் மென்மையான, ரசாயனம் சேர்க்காத சோப்பு கொண்டு முகத்தைக் கழுவிய பின்பு டோனர் அல்லது ரோஜா பன்னீரை சுத்தமான பஞ்சில் நனைத்து முகம் முழுவதும் துடைக்கவும். இது முகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்கும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசர் அல்லது கற்றாழை ஜெல் தடவி முகத்தை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருப்பது அவசியம்.

    * வாரம் ஒரு முறை சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவது அவசியம். காபி தூளுடன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தில் மென்மையாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். தண்ணீரில் ஊற வைத்தக் கொண்டைக்கடலையுடன் தேங்காய் எண்ணெய் கலந்து கொரகொரப்பாக அரைத்து, அதனை முகத்தில் தடவி 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் இறந்த செல்கள் அகன்று புதிய செல்கள் உருவாகி சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.

    * கண்ணுக்கு கீழ் கருவளையம் இருப்பவர்கள் மனஅழுத்தத்தைக் குறைப்பது அவசியம். இரவில் 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் முக்கியமானது. கூடுதலாக 'ஐ கிரீம்' பயன்படுத்தலாம் அல்லது கற்றாழை ஜெல்லை கண்களைச் சுற்றி உள்ள சருமத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடலாம். இது கருவளையங்கள் நீங்கி கண்கள் பளிச்சிட உதவும். திருமணம் நெருங்கும் நாட்களில், சரும பராமரிப்பு முறைகள் மற்றும் மேக்கப் போன்றவற்றில் எதையும் புதிதாக முயற்சி செய்து பார்க்க வேண்டாம். சந்தைகளில் கிடைக்கும் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தால், 3 மாதத்திற்கு முன்பாகவே பயன்படுத்த ஆரம்பிப்பது நல்லது.

    ×